Home இந்தியா தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு!

தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு!

702
0
SHARE
Ad

சென்னை: தமிழகத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் வருகிற மே 10 முதல் மே 24 வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள், அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அண்மையில், செங்கல்பட்டில் சில தினங்களுக்கு முன், பிராணவாயு பற்றாக்குறையால் 13 பேர் உயிரிழந்தனர்.