Home நாடு தேசிய பாதுகாப்பு மன்ற உறுப்பினர்களை அரசு மாற்ற வேண்டும்!

தேசிய பாதுகாப்பு மன்ற உறுப்பினர்களை அரசு மாற்ற வேண்டும்!

847
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோயை எதிர்கொண்ட ஒரு வருடத்திற்கும் மேலாக, தேசிய கூட்டணி அரசாங்கம் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் பலவீனத்தை ஒப்புக் கொள்ள தயங்குவதாக பிரதமர் துறை முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிம் கூறினார்.

எனவே, அவரைப் பொறுத்தவரை, பிரதமர் மொகிதின் யாசின், தேசிய பாதுகாப்பு மன்றத்தின் உறுப்பினர்களை மாற்றியமைக்க வேண்டும் என்று கூறினார், காரணம், அவர்கள் கொள்கைகளை உருவாக்கும் மற்றும் கொவிட் -19 உடன் கையாள்வதில் பணிபுரிகின்றனர்.

“நாம் கடந்த 18 மாதங்களில் தோல்வியடைந்தோம். உங்கள் பலவீனங்களை ஒப்புக்கொள்ள வெட்கப்பட வேண்டாம். மற்றொரு குழுவை தேர்ந்தெடுங்கள்.

#TamilSchoolmychoice

“காவல் துறை மற்றும் இராணுவ அதிகாரிகள் தேவையில்லை. அரசியல் நலன்களை மட்டுமே கவனிக்கும் பல அரசியல்வாதிகள் தேவையில்லை,” என்று அவர் கூறினார்.

கொட் -19 ஐ நிர்வகிப்பதில் மலேசியாவை விட குறைவான வளர்ச்சியடைந்த மற்ற நாடுகள் சிறப்பாக பணியாற்றுவதாக சைட் கூறினார்.

காரணம், பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இல்லாதவர்களை அரசாங்கம் தேர்ந்தெடுப்பதால் தான் இது நடப்பதாக அவர் கருதுகிறார்.

“இப்போது அவசரநிலை நடப்பில் இருப்பதால், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு குறித்து பிரதமர் கவலைப்பட வேண்டியதில்லை. அவர் நாட்டிற்காக சிறந்ததைச் செய்ய வேண்டும்,” என்று அவர் முகநூலில் தெரிவித்துள்ளார்.