Home நாடு நோன்பு பெருநாள் விதிமுறை மீறல்: அஸ்மின் குடும்பத்தினர் விசாரிக்கப்படுவர்

நோன்பு பெருநாள் விதிமுறை மீறல்: அஸ்மின் குடும்பத்தினர் விசாரிக்கப்படுவர்

467
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மே 13 அன்று அனைத்துலக வணிக மற்றும் தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடந்ததாகக் கூறப்படும் கூட்டத்தின் ஆரம்ப விசாரணையில், வருகையாளர்கள் அனைவரும் ஒரே வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

புத்ராஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர் முகமட் பாட்சில் அலி, ஜாலான் பிரசின்ட் 10/7 இல் உள்ள இல்லத்தின் பாதுகாப்பு இடுகையில் உள்ள பதிவுகளின்படி அந்த நாளில் விருந்தினர்கள் யாரும் இல்லை என்று கூறினார்.

உம்மி ஹபில்டா அலிக்கு சொந்தமான முகநூல் இடுகை குறித்து காவல் துறையில் அறிக்கைப் பெற்ற பின்னர் நேற்று விசாரணை தொடங்கப்பட்டதாக பாட்சில் கூறினார்.

#TamilSchoolmychoice

காவல் துறையினர் உம்மி உள்ளிட்ட அனைவரையும் விசாரிப்பார்கள் என்று பாட்சில் கூறினார்.

மே 13 அன்று, அஸ்மின் தனது குடும்பத்தின் புகைப்படங்களை பதிவேற்றியிருந்தார். ஒரு புகைப்படத்தில் அவரது பேரக்குழந்தைகளுடன் அவர் இருந்தார்.

இதைத் தொடர்ந்து, சமூக ஊடகப் பயனர்கள் அஸ்மின் மீது அவதூறு பரப்பினர்.