இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை 616,815- ஆக உயர்ந்துள்ளது.
மொத்தம் பதிவான 6,241 தொற்று சம்பவங்களில் 6,227 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 14 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.
கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 86,628 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 890 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 444 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.
கடந்த ஒரு நாளில் மரண எண்ணிக்கை 87 ஆகப் பதிவாகியிருக்கிறது. இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரண எண்ணிக்கை 3,378 ஆக உயர்ந்திருக்கிறது.
அதனை அடுத்து சரவாக் 600 தொற்றுகளை ஒரு நாளில் பதிவு செய்தது.
கோலாலம்பூரில் 415 தொற்றுகள் பதிவாயின. ஜோகூர் மாநிலத்தில் 565 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.