Home நாடு கொவிட்-19: மரணங்கள் 87; புதிய தொற்றுகள் 6,241; 3-வது நாளாக எண்ணிக்கை குறைந்தன!

கொவிட்-19: மரணங்கள் 87; புதிய தொற்றுகள் 6,241; 3-வது நாளாக எண்ணிக்கை குறைந்தன!

1334
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 6) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 6,241 ஆகும். மூன்றாவது நாளாக தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதையே இது காட்டுகிறது.

இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை 616,815- ஆக உயர்ந்துள்ளது.

மொத்தம் பதிவான 6,241 தொற்று சம்பவங்களில் 6,227 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 14 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 5,133 -ஆக பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 526,809 ஆக உயர்ந்திருக்கிறது.

கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 86,628 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 890 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 444 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

கடந்த ஒரு நாளில் மரண எண்ணிக்கை 87 ஆகப் பதிவாகியிருக்கிறது. இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரண எண்ணிக்கை 3,378 ஆக உயர்ந்திருக்கிறது.

மாநிலங்கள் அளவில் மிக அதிகமான தொற்றுகளை சிலாங்கூர் மீண்டும் பதிவு செய்தது. 2,178 தொற்றுகளை சிலாங்கூர் பதிவு செய்தது.

அதனை அடுத்து சரவாக் 600 தொற்றுகளை ஒரு நாளில் பதிவு செய்தது.

கோலாலம்பூரில் 415 தொற்றுகள் பதிவாயின. ஜோகூர் மாநிலத்தில் 565 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.