சுகாதார அமைச்சு இந்தத் தகவலை வெளியிட்டது.
முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாகப் பின்பற்றப்படுவதால் இந்த தொற்றுகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகின்றது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையிலான ஒருநாள் தொற்றுகள் 6,241 ஆக இருந்த நிலையில் இன்று இந்த எண்ணிக்கை 5,271 ஆக சரிவு கண்டிருப்பது ஆறுதல் ஏற்படுத்தும் தகவலாக அமைந்திருக்கிறது.
மாநிலங்கள் அளவில் மிக அதிகமான தொற்றுகளை சிலாங்கூர் மீண்டும் பதிவு செய்தது.1,374 தொற்றுகளை சிலாங்கூர் பதிவு செய்தது.
அதனை அடுத்து சரவாக் 703 தொற்றுகளை ஒரு நாளில் பதிவு செய்தது.
கோலாலம்பூரில் 455 தொற்றுகள் பதிவாயின. ஜோகூர் மாநிலத்தில் 355 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. நெகிரி செம்பிலான் 571 தொற்றுகளைப் பதிவு செய்தது.