Home நாடு கொவிட்-19: புதிதாக 5,738 சம்பவங்கள் பதிவு

கொவிட்-19: புதிதாக 5,738 சம்பவங்கள் பதிவு

491
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த 24 மணி நேரத்தில் 5,738 கொவிட் -19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 678,764 ஆக உயர்ந்துள்ளதாக தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மொத்தம் பதிவான 5,738 தொற்று சம்பவங்களில் 5,735 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 3 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 7,530-ஆக பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 608,465-ஆக உயர்ந்திருக்கிறது.

கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 66,097 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 909 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 441 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

கடந்த ஒரு நாளில் மரண எண்ணிக்கை 60-ஐ தொட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரண எண்ணிக்கை 4,202-ஆக உயர்ந்திருக்கிறது.

சிலாங்கூரில் அதிகமாக 1,858 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் (1,086), கோலாலம்பூர் (641), சரவாக் (559), ஜோகூர் (449), சபா (248), கெடா (197), மலாக்கா (184), கிளந்தான் (154), பினாங்கு (97) , லாபுவான் (97), திரெங்கானு (77), பகாங் (54), பேராக் (30), மற்றும் புத்ராஜெயாவில் ஏழு சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

பெர்லிஸில் இன்று எந்தவொரு சம்பவமும் பதிவு செய்யப்படவில்லை.