சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா விடுத்த அறிக்கையில் இதுவரையிலான மொத்த கொவிட-19 தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 691,115 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.
மொத்தம் பதிவான 5,911 தொற்று சம்பவங்களில் 5,910 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். ஒரே ஒரு தொற்று மட்டுமே வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.
கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 64,523 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 886 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 441 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.
கடந்த ஒரு நாளில் மரண எண்ணிக்கை 72-ஐ தொட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரண எண்ணிக்கை 4,348-ஆக உயர்ந்திருக்கிறது.
சரவாக்கில் 569 தொற்றுகளும் ஜோகூரில் 498 தொற்றுகளும் நெகிரி செம்பிலானில் 770 தொற்றுகளும் பதிவாகின.