கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 81 பேர் கொவிட் தொற்றால் மரணத்தைத் தழுவினர்.இவர்களில் ஆண்கள் 45 பேர், பெண்கள் 36 பேர். மரணமடைந்தவர்களில் 53 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள். 27 பேர் 50-க்கும் 60-க்கும் இடைப்பட்ட வயதைக் கொண்டவர்கள்.
ஒருவர் 30 வயதுக்கும் குறைவான வயது கொண்டவர்.
மரணமடைந்தவர்களில் 10 பேர் மரணமடைந்த பின்னர் மருத்துவமனைகளுக்குக் கொண்டுவரப்பட்டவர்களாவர்.
சிலாங்கூர் 30 மரணங்களோடு மிக அதிகமான மரணங்களைப் பதிவு செய்திருக்கிறது.
இதற்கிடையில் இன்று சனிக்கிழமை ஜூன் 26 வரையிலான ஒரு நாளில் மட்டும் புதிய 5,803 கொவிட் – 19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மொத்தம் பதிவான 5,803 தொற்று சம்பவங்களில் 5,793 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 10 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.
கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு நாளில் 5,193 -ஆக பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 662,932-ஆக உயர்ந்திருக்கிறது.
கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 60,646 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 866 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 435 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் 741 தொற்றுகளையும் சரவாக் 491 தொற்றுகளையும் கண்டிருக்கிறது.
கோலாலம்பூர் 628 தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.