ஒருநாள் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து 6 ஆயிரத்துக்கும் கூடுதலாக அதிகரித்தது. பதிவான மொத்த தொற்றுகள் 6,988 ஆகும்.
கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் இருக்கும் காலத்திலும் நாட்டில் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கையும், மரண எண்ணிக்கையும் தொடர்ந்து கணிசமான அளவில் நீடித்துக் கொண்டிருக்கின்றன.
மரணமடைந்தவர்களில் ஆண்கள் 47 பேர், பெண்கள் 37 பேர். மரணமடைந்தவர்களில் 9 பேர் மரணத்துக்குப் பின்னரே மருத்துவமனைகளுக்குக் கொண்டுவரப்பட்டனர். இவர்களில் ஒருவர் 30 வயதுக்கும் குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மரணமடைந்தவர்களில் 53 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களாவர். 30 பேர் 50-க்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட வயதினர்களாவர்.
இதற்கிடையில் இன்று வியாழக்கிழமை ஜூலை 1-ஆம் தேதி வரையிலான மொத்த ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 6,988 ஆக பதிவாகியது.
இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 758,967 ஆக உயர்ந்திருக்கிறது.
கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு நாளில் 5,580 -ஆக பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 688,260 -ஆக உயர்ந்திருக்கிறது.
கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 65,453 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 917 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 445 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.
அதற்கு அடுத்த நிலையில் 988 தொற்றுகளோடு கோலாலம்பூர் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மூன்றாவது இடத்தை 692 தொற்றுகளோடு நெகிரி செம்பிலான் பதிவு செய்திருக்கிறது.
சரவாக் 544 தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.