ஒருநாள் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து 6 ஆயிரத்துக்கும் கூடுதலாக அதிகரித்தது. இன்று ஒருநாளில் பதிவான மொத்த தொற்றுகள் 6,982 ஆகும்.
கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் இருக்கும் காலத்திலும் நாட்டில் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கையும், மரண எண்ணிக்கையும் தொடர்ந்து கணிசமான அளவில் நீடித்துக் கொண்டிருக்கின்றன.
இன்றைய ஒருநாள் மரணங்களைத் தொடர்ந்து நாட்டில் பதிவாகியிருக்கும் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தைக் கடந்து 5,327 ஆக உயர்ந்தது.
மரணமடைந்தவர்களில் 43 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களாவர். 28 பேர் 50-க்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட வயதினர்களாவர்.
இதற்கிடையில் இன்று வெள்ளிக்கிழமை ஜூலை 2-ஆம் தேதி வரையிலான மொத்த ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 6,982 என பதிவாகியது.
இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 765,949 ஆக உயர்ந்திருக்கிறது.
மொத்தம் பதிவான 6,982 தொற்று சம்பவங்களில் 6,979 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 3 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.
கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 66,084 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 905 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 443 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.
சிலாங்கூர் 2,907 தொற்றுகளோடு மிக அதிகமான தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.
அதற்கு அடுத்த நிலையில் 637 தொற்றுகளோடு கோலாலம்பூர் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மூன்றாவது இடத்தை 606 தொற்றுகளோடு நெகிரி செம்பிலான் பிடித்திருக்கிறது.
சரவாக் 440 தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.