Home நாடு கொவிட்-19: மரணங்கள் 63 – சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெறுபவர்கள் 443

கொவிட்-19: மரணங்கள் 63 – சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெறுபவர்கள் 443

1581
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூலை 4 வரையிலான ஒரு நாளில் நாடு முழுமையிலும் மரண எண்ணிக்கை 63 மரணங்கள் ஆகப் பதிவாயின. நேற்று சனிக்கிழமை ஒரு நாளில் இந்த மரணங்களின் எண்ணிக்கை 107 ஆக பதிவாயின.

இன்றைய ஒருநாள் மரணங்களைத் தொடர்ந்து நாட்டில் பதிவாகியிருக்கும் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தைக் கடந்து 5,497 ஆக உயர்ந்தது.

ஒருநாள் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து 6 ஆயிரத்துக்கும் கூடுதலாக நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

#TamilSchoolmychoice

இன்று ஒருநாளில் பதிவான மொத்த தொற்றுகள் 6,045 ஆகும்.

மரணமடைந்தவர்களில் ஆண்கள் 39 பேர், பெண்கள் 24 பேர். மரணமடைந்தவர்களில் 7 பேர் மரணத்துக்குப் பின்னரே மருத்துவமனைகளுக்குக் கொண்டுவரப்பட்டனர். இவர்களில் ஒருவர் 30 வயதுக்கும் குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மரணமடைந்தவர்களில் 33 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களாவர். 29 பேர் 50-க்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட வயதினர்களாவர்.

இதற்கிடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூலை 4-ஆம் தேதி வரையிலான மொத்த ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 6,045 என பதிவாகியது.

இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 778,652 ஆக உயர்ந்திருக்கிறது.

மொத்தம் பதிவான 6,045 தொற்று சம்பவங்களில் 6,025 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 20 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.

கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு நாளில் 5,271-ஆக பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 705,486 -ஆக உயர்ந்திருக்கிறது.

கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 67,669 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 917 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 443 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 778,652 ஆக உயர்ந்திருக்கிறது.

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால், புதிய தொற்றுகளில் பாதிக்கும் மேற்பட்டவை அருகருகே அமைந்திருக்கும் 3 மாநிலங்களில் பதிவானவை என்பதாகும். அந்த மாநிலங்கள் பின்வருமாறு:

சிலாங்கூர் –                2,262
கோலாலம்பூர் –              616
நெகிரி செம்பிலான் –     531

மொத்த தொற்றுகள் –   3,409

சிலாங்கூரும் நெகிரியும் ஒரே எல்லைக் கோட்டைக் கொண்ட மாநிலங்கள். கோலாலம்பூரும், சிலாங்கூரும் விளக்கத் தேவையில்லை. இந்த 3 மாநிலங்களில் மட்டும் மொத்த தொற்றுகளில் பாதிக்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவாகியிருக்கும் நிலையில் நாடு முழுமையிலும் ஏன் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்ற கேள்விகளும் சமூக ஊடகங்களும் எழுப்பப்பட்டிருக்கின்றன.

இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 778,652 ஆக உயர்ந்திருக்கிறது.

சிலாங்கூர் 2,262 தொற்றுகளோடு மிக அதிகமான தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.

அதற்கு அடுத்த நிலையில் 616 தொற்றுகளோடு கோலாலம்பூர் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மூன்றாவது இடத்தை 531 தொற்றுகளோடு நெகிரி செம்பிலான் பிடித்திருக்கிறது.

சரவாக் 365 தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.