ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்களின் ஆலோசனை மற்றும் ஆதரவின் பேரில் தேசிய ம.இ.கா மகளிர் அணி நாடு தழுவிய நிலையில் ‘மகளிர் அணியின் உணவுக்கூடை” வழங்கும் திட்டத்தின் கீழ் மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கி வருவதாக அதன் தலைவி திருமதி உஷா நந்தினி தெரிவித்தார்.
இந்த உணவுப் பொருட்கள் நாடு தழுவிய நிலையில் இருக்கும் ம.இ.கா தொகுதித் தலைவிகள், தலைவர்கள், கிளைத் தலைவிகள், தலைவர்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தவர்களுக்கு வீடு வீடாகச் சென்று உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக உஷா நந்தினி குறிப்பிட்டார்.
இந்த கோவிட் 19 காலகட்டத்தில் மக்களுக்கான இந்த உதவிகள் தங்களின் சுமையை ஓரளவுக்கு குறைத்திருப்பதாக அதனை பெற்றுக் கொண்ட மக்கள் தெரிவித்தனர். இந்த உணவுப் பொருட்களை வழங்கிய ம.இ.கா மகளிர் பிரிவு, அதனை வழங்க ஏற்பாடு செய்த ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் மற்றும் அனைவருக்கும் அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
ம.இ.கா மகளிர் அணியின் இந்நடவடிக்கைக்கு ஆதரவும் ஆலோசனையும் வழங்கிய ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், மகளிர் அணியினர் உள்ளிட்ட அனைவருக்கும் தேசிய ம.இ.கா மகளிர் அணித் தலைவி திருமதி உஷா நந்தினி நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.