Home நாடு கொவிட்-19: மரண எண்ணிக்கை 91 – மரணத்திற்குப் பின்னர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள் 10...

கொவிட்-19: மரண எண்ணிக்கை 91 – மரணத்திற்குப் பின்னர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள் 10 பேர்!

1997
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை  ஜூலை 11 வரையிலான ஒரு நாளில் நாடு முழுமையிலும் 91 மரணங்கள் பதிவாயின. அதே வேளையில் மேலும் 961 பேர் நாடு முழுவதிலும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக, கொவிட் மரண எண்ணிக்கை தொடர்ந்து கொண்டிருக்கும் அபாயம் நிலவுவதாக கருதப்படுகிறது.

இன்றைய ஒருநாள் மரணங்களைத் தொடர்ந்து நாட்டில் பதிவாகியிருக்கும் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்து 6,158 ஆக உயர்ந்தது.

#TamilSchoolmychoice

மரணமடைந்தவர்களில் ஆண்கள் 52 பேர், பெண்கள் 39 பேர்.  மரணமடைந்தவர்களில் 10 பேர் மரணத்துக்குப் பின்னரே மருத்துவமனைகளுக்குக் கொண்டுவரப்பட்டனர்.

மரணமடைந்தவர்களில் 54 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களாவர். 36 பேர் 50-க்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட வயதினர்களாவர்.

ஒருநாள் தொற்றுகளின் எண்ணிக்கை 9,105

ஒருநாள் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து 9 ஆயிரத்தைக் கடந்திருக்கிறது. இன்றைய ஒருநாளில் 9 ஆயிரத்துக்கும் கூடுதலாக அதிகரித்து 9,105 எனப் பதிவாகியது.

இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 836,296 ஆக உயர்ந்திருக்கிறது.

மொத்தம் பதிவான 9,105 தொற்று சம்பவங்களில் 9,087 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 18 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.

கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு நாளில் 5,194 – ஆக பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 742,297 -ஆக உயர்ந்திருக்கிறது.

கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 87,841 ஆக உயர்ந்திருக்கிறது.

இவர்களில் 961 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 455 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூலை 11 வரையில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்தம் 9,105 புதிய தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.

இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 836,296 ஆக உயர்ந்திருக்கிறது.

மாநிலங்களைப் பொறுத்தவரையில் முதல் இடத்தில் வழக்கம்போல் சிலாங்கூர் இருக்கிறது. 4,682 தொற்றுகளை சிலாங்கூர் பதிவு செய்திருக்கிறது.

மொத்த தொற்றுகளில் பாதிக்கும் மேற்பட்ட தொற்றுகள் சிலாங்கூரில் பதிவாகியிருக்கின்றன.

சிலாங்கூருக்கு அடுத்த நிலையில் கோலாலம்பூர் 1,247 தொற்றுகளோடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

மூன்றாவது இடத்தை 541 தொற்றுகளோடு நெகிரி செம்பிலான் பிடித்திருக்கிறது.