எனினும் நாட்டில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அளவில் தொற்றுகள் பதிவாகி வருவது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 916,561 ஆக உயர்ந்திருக்கிறது.
சிலாங்கூருக்கு அடுத்த நிலையில் 945 தொற்றுகளோடு கோலாலம்பூர் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
808 தொற்றுகளோடு வழக்கத்திற்கு மாறாக ஜோகூர் 3-வது இடத்தில் இருக்கிறது.
நெகிரி செம்பிலான் 771 தொற்றுகளோடு நான்காவது இடத்தில் இருக்கிறது.