Home நாடு கொவிட்-19; மரணங்கள் 219 ஆக உயர்வு – மரணமடைந்து மருத்துவமனை கொண்டுவரப்பட்டவர்கள் 21 பேர்!

கொவிட்-19; மரணங்கள் 219 ஆக உயர்வு – மரணமடைந்து மருத்துவமனை கொண்டுவரப்பட்டவர்கள் 21 பேர்!

2728
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 2) ஒரு நாள் வரையிலான மொத்த கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிக அளவில் 15,764 ஆகப் பதிவாகியது என சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

அதே வேளையில் மரண எண்ணிக்கை 219-ஆக அதிர்ச்சி தரும் வகையில் உயர்ந்திருக்கிறது. இவர்களில் மரணமடைந்த பின்னர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள் 21 பேர்களாவர். மருத்துவமனைகளிலேயே மரணமடைந்தவர்கள் 198 பேர்களாவர்.

இன்றைய மரண எண்ணிக்கையைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 9,403 ஆக உயர்ந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

சிலாங்கூரில் மட்டும் 6,067 தொற்றுகள் பதிவாயின. கோலாலம்பூரில் 1,536 தொற்றுகள் பதிவாகி இருக்கின்றன. இந்த இரு மாநிலங்கள் தவிர்த்து மேலும் 3 மாநிலங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்தன.

கெடா 1,108 தொற்றுகளையும், சபா 1,116 தொற்றுகளையும் ஜோகூர் 1,222 தொற்றுகளையும் பதிவு செய்தன.

199,051 பேர் மருத்துவமனைகளில் நாடு முழுமையிலும் கொவிட் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து கொவிட் காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 200 ஆயிரத்தை நெருங்குகிறது.

அவர்களில் 1,063 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 532 பேர்களுக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

கொவிட் தொடர்பான தொற்றுகளின் ஒருநாள் புள்ளி விவரங்களைக் மேற்கண்ட வரைபடத்தில் காணலாம்.