அதே வேளையில் மரண எண்ணிக்கை 219-ஆக அதிர்ச்சி தரும் வகையில் உயர்ந்திருக்கிறது. இவர்களில் மரணமடைந்த பின்னர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள் 21 பேர்களாவர். மருத்துவமனைகளிலேயே மரணமடைந்தவர்கள் 198 பேர்களாவர்.
இன்றைய மரண எண்ணிக்கையைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 9,403 ஆக உயர்ந்திருக்கிறது.
கெடா 1,108 தொற்றுகளையும், சபா 1,116 தொற்றுகளையும் ஜோகூர் 1,222 தொற்றுகளையும் பதிவு செய்தன.
அவர்களில் 1,063 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 532 பேர்களுக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.
கொவிட் தொடர்பான தொற்றுகளின் ஒருநாள் புள்ளி விவரங்களைக் மேற்கண்ட வரைபடத்தில் காணலாம்.