ஷாஹிடான் காசிம் பெர்லிஸ் மாநிலத்தின் ஆராவ் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமாவார்.
இதுவரையில் யாருக்கு ஆதரவாகவும் சத்தியப் பிரமாணங்கள் கையெழுத்திடப்படவில்லை என்றும், தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்புக் கூட்டத்திற்குத் தான் தலைமை தாங்கியதாகக் கூறப்படும் செய்திகளிலும் உண்மையில்லை என ஷாஹிடான் மேலும் தெரிவித்தார்.
“ஷெராட்டன் நகர்வின்போது மட்டுமே நாங்கள் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் மொகிதின் யாசினுக்கு ஆதரவாக சத்தியப் பிரமாண அறிக்கையில் கையெழுத்திட்டோம்” எனவும் ஷாஹிடான் காசிம் தெரிவித்திருக்கிறார்.