Home நாடு கொவிட்-19; புதிய தொற்றுகள் 2-வது நாளாக 20 ஆயிரம்! மரணங்கள் 160!

கொவிட்-19; புதிய தொற்றுகள் 2-வது நாளாக 20 ஆயிரம்! மரணங்கள் 160!

2684
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 6) ஒரு நாள் வரையிலான மொத்த கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிக அளவில் அதிகரித்து 20 ஆயிரத்தைக் கடந்து 20,889 ஆகப் பதிவாகியது என சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

அதே வேளையில் மரண எண்ணிக்கை 160 ஆகப் பதிவாகியது.

இன்றைய மரண எண்ணிக்கையைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 10,179 ஆக உயர்ந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

ஒருநாளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,394 ஆகப் பதிவாகியது. இதைத் தொடர்ந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 993,020 ஆக உயர்ந்தது.

புதிய தொற்றுகளைத் தொடர்ந்து நாட்டில் இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 1,224,595 என பதிவாகியது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,096 ஆகும். இவர்களில் சுவாசக் கருவிகளின் உதவியோடு 545 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலங்கள் ரீதியான கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கையை மேற்காணும் வரைபடத்தில் காணலாம்.

சிலாங்கூரில் மட்டும்  8,792 தொற்றுகள் பதிவாயின. கோலாலம்பூரில் 2,483 தொற்றுகள் பதிவாகி இருக்கின்றன. இந்த இரு மாநிலங்கள் தவிர்த்து மேலும் 3 மாநிலங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்தன.

கெடா, சபா, ஜோகூர் ஆகியவையே அந்த 3 மாநிலங்களாகும்.

கிளந்தான், நெகிரி செம்பிலான் இரு மாநிலங்களும் ஆயிரத்தை நெருங்கு எண்ணிக்கையிலான தொற்றுகளைப் பதிவு செய்தன.

221,396 பேர் மருத்துவமனைகளில் நாடு முழுமையிலும் கொவிட் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.