கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்திருந்தது. நேற்று 22 ஆயிரத்தைக் கடந்தது. அதுவே இதுவரையிலான மிக அதிகமான தொற்று எண்ணிக்கையாக கருதப்பட்டது.
ஆனால் இன்றோ தொற்றுகளின் எண்ணிக்கை 23 ஆயிரத்தைக் கடந்திருக்கிறது.
சிலாங்கூர் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்து தொடர்ந்து மிக அதிகமான தொற்றுகளைக் கொண்ட மாநிலமாக முன்னிலை வகிக்கிறது.
கோலாலம்பூர், கெடா, பினாங்கு, பேராக், ஜோகூர், கிளந்தான், ஆகிய 6 மாநிலங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்தன.
சபா, சரவாக் இரண்டு மாநிலங்களும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்திருக்கின்றன.