Home நாடு கொவிட் 19 : நேற்றைய ஆறுதல் நொறுங்கியது! மீண்டும் 20,837 புதிய தொற்றுகள்

கொவிட் 19 : நேற்றைய ஆறுதல் நொறுங்கியது! மீண்டும் 20,837 புதிய தொற்றுகள்

1219
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நேற்று ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 17 ஆயிரமாகக் குறைந்தபோது, மலேசியர்கள் மகிழ்ச்சியும் ஆறுதலும் அடைந்தனர். ஆனால், அந்த மனநிலை இன்று விழுந்து நொறுங்கியது.

தொடர்ந்து பல நாட்கள் 20 ஆயிரமாக இருந்து வந்த ஒருநாள் தொற்றுகளின் எண்ணிக்கை கண்டு மிரட்சியுற்றிருந்த மலேசியர்கள் கட்டம் கட்டமாக நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் தொற்றுகள் வீதம் குறைந்து வந்ததைக் கண்டு ஆறுதலடைந்திருந்தனர்.

ஆனால் தற்போது மீண்டும் புதிய ஒருநாள் தொற்றுகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இன்றைய தொற்றுகளின் எண்ணிக்கையைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 1,593,602 ஆக உயர்ந்திருக்கிறது.

மாநிலங்கள் ரீதியிலான கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கையை மேற்கண்ட வரைபடத்தில் காணலாம்.

சிலாங்கூர் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்து  தொடர்ந்து மிக அதிகமான தொற்றுகளைக் கொண்ட மாநிலமாக முன்னிலை வகிக்கிறது.

கோலாலம்பூர், கெடா, பேராக், ஜோகூர், சரவாக், கிளந்தான் ஆகிய 6 மாநிலங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுகள் பதிவாகின.

சபா மாநிலத்தில் 3,376 தொற்றுகள் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.