Home இந்தியா ஓ.பன்னீர் செல்வம் மனைவி விஜயலெட்சுமி மாரடைப்பால் காலமானார்

ஓ.பன்னீர் செல்வம் மனைவி விஜயலெட்சுமி மாரடைப்பால் காலமானார்

1040
0
SHARE
Ad

சென்னை : முன்னாள் தமிழக முதலமைச்சரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலெட்சுமி இன்று புதன்கிழமை (செப்டம்பர் 1) காலை மாரடைப்பால் காலமானார்.

அவரின் நல்லுடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மற்ற அதிமுக பிரமுகர்களும் அவரின் நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருவதோடு, ஓ.பன்னீர் செல்வத்திற்கும் அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

விஜயலெட்சுமியின் நல்லுடல் அவரின் இறுதிச் சடங்குகளுக்காக தேனிக்கு கொண்டு செல்லப்படவிருக்கிறது.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal