Home நாடு “புதிய கட்சி – அண்ணனின் ஜனநாயக உரிமை” – பிரதமர் கூறுகிறார்

“புதிய கட்சி – அண்ணனின் ஜனநாயக உரிமை” – பிரதமர் கூறுகிறார்

605
0
SHARE
Ad

பெரா (பகாங்) : “குவாசா ராயாட் என்ற பெயரில் புதிய கட்சி அமைப்பது எனது அண்ணனின் ஜனநாயக உரிமை” என்று கூறியிருக்கிறார் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்.

தனது அண்ணன் காமாருசமான் யாக்கோப் “குவாசா ராயாட்” என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை அமைத்திருப்பது குறித்து கருத்துரைத்த பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி, அவ்வாறு செய்வது தனது சகோதரரின் தனிப்பட்ட உரிமை எனக் கூறியிருக்கிறார்.

கமருசாமான் யாக்கோப்

“நமது நாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வேறு வேறு அரசியல் கட்சிகளில் இணைந்து செயல்படுவது புதிதான ஒன்றல்ல. இது ஒருவரின் ஜனநாயக உரிமை. அதற்கேற்ப அவர்கள் செயல்படட்டும். அதனை வரவேற்போம்” என்றும் அவர் மேலும் கூறினார்.

#TamilSchoolmychoice

தனது நாடாளுமன்றத் தொகுதியான பெராவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 17) நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

குவாசா ராயாட் என்ற பெயரில் இன்னொரு புதிய அரசியல் கட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 10)  பல இனக் கட்சியாக அதிகாரபூர்வமாக தோற்றம் கண்டது. அதற்குத் தலைவராக பிரதமரின் அண்ணன் காமாருசமான் யாக்கோப் செயல்படுகிறார்.

அனைத்து இனங்களையும், மதங்களையும் உள்ளடக்கிய கட்சியாக அது இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தேசிய முன்னணிக்கு நட்பான கட்சியாக இந்தப் புதிய “குவாசா ராயாட்” கட்சி திகழும் என்றும் காமருசாமான் அறிவித்திருக்கிறார்.

ஒருகாலத்தில் மலாயாப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர் இயக்கச் செயல்பாட்டாளராக செயல்பட்டவர் கமருசாமான். மலாயாப் பல்கலைக் கழகத்தில் மாணவர் கழகத் தலைவராக இயங்கியவர்.

1974-இல் நடைபெற்ற பாலிங் மாணவர் போராட்டத்தின் காரணமாக அவர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த வரலாற்றையும் கொண்டவர் கமருசாமான்.

மேலும் அவரின் தலைமையின் கீழ் தொடங்கப்படவிருக்கும் கட்சி புதிதாக சங்கப் பதிவகத்தின் அனுமதிக்குக் காத்திராமல் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கட்சி ஒன்றுடன் இணைந்து செயல்படவும் திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன எனவும் சில அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.