Home நாடு உப்சி பல்கலைக் கழகத்தில் நல்லார்க்கினியன் மரபு கவிதை விழா

உப்சி பல்கலைக் கழகத்தில் நல்லார்க்கினியன் மரபு கவிதை விழா

776
0
SHARE
Ad

தஞ்சோங் மாலிம் : சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக் கழகத்தில் (UPSI) வருடாந்திர நிகழ்ச்சியாக நடைபெற்றுவரும் நல்லார்க்கினியன் மரபு கவிதை விழாவிற்குத் இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் ஏற்பாட்டாளர்கள் வரவேற்கின்றனர்.

எதிர்வரும் சனிக்கிழமை ஜூலை 2-ஆம் தேதி பிற்பகல் 3.00 மணிக்கு உப்சி பல்கலைக் கழகத்தின் டேவான் எஸ்ஐடிசி மண்டபத்தில் நடைபெறுகிறது. மனித வள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் இந்த நிகழ்ச்சியை அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றுவார்.