எதிர்வரும் வெள்ளிக்கிழமை அக்டோபர் 7-ஆம் தேதி 2023-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு அந்த வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடிக்கக் கூடும் என்றும் அதன் மூலம் நாட்டில் மீண்டும் ஓர் அரசியல் நெருக்கடி ஏற்படலாம் என்றும் ஆரூடங்கள் எழுந்திருக்கின்றன.
வெள்ளிக்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்றும் அதற்கு முன்பாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி மாமன்னரைச் சந்தித்து நாடாளுமன்றத்தைக் கலைக்கும் கோரிக்கையை முன்வைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.