Home நாடு பகாங் தியோமான் சட்டமன்றத் தொகுதிக்கான பெரிக்காத்தான் வேட்பாளர் காலமானார் – இடைத் தேர்தல் நடைபெறும்!

பகாங் தியோமான் சட்டமன்றத் தொகுதிக்கான பெரிக்காத்தான் வேட்பாளர் காலமானார் – இடைத் தேர்தல் நடைபெறும்!

295
0
SHARE
Ad

குவாந்தான் : பகாங் சட்டமன்றத் தொகுதியான தியோமான் தொகுதியில் போட்டியிடும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி வேட்பாளர் – பாஸ் கட்சியின் – முகமட் யூனுஸ் ரம்லி, ரொம்பின் மருத்துவமனையில் இன்று சனிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு காலமானார்.

சுயநினைவிழந்து காணப்பட்ட நிலையில் யூனுஸ் ரம்லி அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

இதைத் தொடர்ந்து தியோமான் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்களிப்பு இன்று நடைபெறாது. அந்தத் தொகுதிக்கான இடைத் தேர்தல் பிறிதொரு நாளில் நடத்தப்படும்.

#TamilSchoolmychoice

இந்தத் தொகுதியில் 5 முனைப் போட்டி ஏற்பட்டிருந்தது. சுலைமான் பாக்கார் (சுயேச்சை), பெஜூவாங் கட்சி சார்பில் ஓஸ்மான் ஏ.பாக்கார், முகமட் பாட்ஸ்லி முகமட் ரம்லி (பக்காத்தான் ஹாரப்பான்), முகமட் ஜொஹாரி ஹூசேன் (தேசிய முன்னணி) ஆகியோர் இங்கு போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர்.