அவர் மாமன்னராக அரியணையில் அமர்ந்தபோது பிரதமராக இருந்தவர் துன் மகாதீர். 2020-இல் மகாதீர் பதவி விலக, அடுத்து வந்த ஆண்டுகளில் டான்ஸ்ரீ முஹிடின் யாசின், டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி ஆகியோர் பதவியேற்றனர்.
தங்களின் ஆட்சிக் காலம் சிறப்பான அமைய ஒத்துழைத்த மலேசியர்களுக்கும் தங்களின் நன்றியை மாமன்னர் தம்பதியர் தெரிவித்துக் கொண்டனர்.
பிரதமர் அன்வார் தம்பதியரும், துணைப் பிரதமர்களும் மாமன்னரை சடங்குபூர்வ நிகழ்ச்சிக்குப் பின்னர் பகாங் மாநிலத் தலைநகர் குவாந்தானுக்கு வழியனுப்பி வைத்தனர். மாமன்னர் விடைபெற்ற சடங்கில் இரண்டு யானைகளும் பங்கு பெற்றன.
மாமன்னரின் அந்த சடங்குபூர்வமான பிரியாவிடைக் காட்சிகளை இங்கே காணலாம்: