5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் சார்பில் நீதிபதி வெர்னோன் ஓங் வழங்கிய அந்தத் தீர்ப்பின்படி 4-1 பெரும்பான்மையில் நஜிப்பின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் மீண்டும் காஜாங் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு தன் தண்டனையை அனுபவிப்பார்.
அந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- வழக்கை ஒத்தி வைப்பதா இல்லையா என்பது முழுக்க முழுக்க நீதிமன்றத்தின் முடிவாகும்.
- மேல்முறையீட்டில் நிகழ்ந்த குளறுபடிகளுக்கும் துரதிர்ஷ்டத்திற்கும் முழுக்க முழுக்க நஜிப்பே காரணமாகும்.
- நஜிப்பின் வழக்கறிஞர் ஹிஷாத் தே போக் தெய்க் வழக்கிலிருந்து விலகிக்கொள்வதா இல்லையா என்பதை நீதிமன்றமே முடிவு செய்ய வேண்டும்.
- நஜிப் வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளாதது தலைமை நீதிபதி தெங்கு மைமுன் செய்த சரியான முடிவாகும்.
Comments