Home Photo News அன்வார் இப்ராகிம் கேஎல்ஐஏ விமான நிலையத்திற்கு திடீர் வருகை

அன்வார் இப்ராகிம் கேஎல்ஐஏ விமான நிலையத்திற்கு திடீர் வருகை

396
0
SHARE
Ad

சிப்பாங் : மலேசியாவுக்கு சீனாவில் இருந்து வருகை மேற்கொண்ட பயணி ஒருவர் சட்டத்திற்குப் புறம்பாக தடுத்து வைக்கப்பட்டது, அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண சுற்றுலாத் துறை அமைச்சர் தியோங் கிங் சிங் நேரடியாக கேஎல்ஐஏ விமான நிலையத்திற்கு வருகை மேற்கொண்டது, அதன் காரணமாக நிகழ்ந்த சம்பவங்கள் கடந்த சில நாட்களாக பரபரப்புச் செய்திகளாக உலா வந்து கொண்டிருக்கின்றன.

இதைத் தொடர்ந்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நிலைமையை நேரில் கண்டறிவதற்காக கேஎல்ஐஏ விமான நிலையத்திற்கு இன்று திடீர் வருகை மேற்கொண்டார்.

#TamilSchoolmychoice

விமான நிலையத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து நேரடியாக விளக்கங்கள் பெற்றார் அன்வார். அவர் வருகையின்போது எடுக்கப்பட்ட காட்சிகளை இங்கே காணலாம்:

நடந்த சம்பவங்கள் குறித்து முழுமையான அறிக்கை கிடைத்த பின்னரே அடுத்த கட்ட முடிவை அறிவிக்கப் போவதாகவும் அன்வார் தெரிவித்தார்.