அவருக்கு நேர்ந்த காயங்கள் காரணமாக சில மருத்துவப் பரிசோதனைகளும் அவருக்கு நடத்தப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.
மருத்துவமனை படுக்கையில் மம்தா பானர்ஜி படுத்திருக்க, நெற்றிப்பொட்டில் ஆழமான காயத்தோடும், அந்த காயத்திலிருந்து வழியும் இரத்தத்தையும் காட்டும் புகைப்படத்தை அவரின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சமூக ஊடகங்களில் பகிர்ந்தது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மம்தா பேனர்ஜி கூடிய விரைவில் உடல் நலம் பெற்று பெற வேண்டுமென வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் செய்தி வெளியிட்டார்.