இந்த வழக்கு மாமன்னரின் அதிகாரத்தை விமர்சிக்கும் நோக்கம் கொண்டது அல்ல! மாறாக நஜிப்புக்கு வழங்கப்பட்ட தண்டனைக் குறைப்பு சட்ட நடைமுறைகளின்படி நடைபெற்றதா இல்லையா என்பதை நிர்ணயிப்பதற்கான வழக்கு என மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எசிரா அப்துல் வஹாப் தெரிவித்தார்.
வழக்கறிஞர் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் நஜிப்பின் தண்டனைக் குறைப்பு மீதான முடிவு குறித்து அதிருப்தி கொண்டதால் வழக்கறிஞர் மன்றம் வழக்கு தொடுக்கும் முடிவை எடுத்ததாக எசிரா மேலும் தெரிவித்தார்.