Home இந்தியா அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15-வரை திஹார் சிறைவாசம்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15-வரை திஹார் சிறைவாசம்

241
0
SHARE
Ad
அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடில்லி : டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வியாழக்கிழமை (மார்ச் 21) மாலையில் அவரின் இல்லத்தில், டில்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பில் அமுலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அன்றிரவு முழுவதும் அவர் அமுலாக்கத் துறை அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.

ஏப்ரல் 19-ஆம் தேதி பொதுத் தேர்தலுக்கான முதல்கட்டத் தேர்தலில் தொடங்க உள்ள நிலையில், ஏப்ரல் 15 வரை அரவிந்த் கெஜ்ரிவாலை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

டெல்லியின் முக்கிய அமைச்சர்கள் மதுபான அனுமதிக்கான ஊழலில் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டனர். சத்யேந்தர் ஜெயின், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா என 3 அமைச்சர்கள் தற்போது பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிறையில் இருக்கிறார்கள்.

#TamilSchoolmychoice

கடந்த 2021-22-ஆம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தில்  ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என புகார்கள் எழுந்துள்ளன.

கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பது இந்திய அளவிலும், அனைத்துலக அளவிலும் எதிர்மறையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

இன்றும் கூட, கெஜ்ரிவால் கைது நடவடிக்கைக்கு எதிராக அவரின் இல்லத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய வரலாற்றில் பதவி வகிக்கும் முதலமைச்சர் ஒரு கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும்.

2021–2022-ஆம் ஆண்டுகளில் டில்லி அரசாங்கம் மதுபானங்களுக்கான தீர்வை கொள்கையை அமுல்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம் மதுபான வியாபாரிகள் தங்களுக்குள் ஆதிக்கக் குழுக்களை ஏற்படுத்த வழியமைத்துத் தந்ததாகவும், இதன் தொடர்பில் கள்ளப் பணப் பரிமாற்றம், இலஞ்சம் வழங்குதல் ஆகியவை நிகழ்ந்ததாகவும் அமுலாக்கத் துறை குற்றம் சாட்டியிருக்கிறது. பின்னர் இந்த மதுபானக் கொள்கை இரத்து செய்யப்பட்டது.

இந்தக் கொள்கை தொடர்பில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை – இலஞ்சப் பணம் எதவும் பரிமாறப்படவில்லை என ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.