இந்தியாவின் முன்னணி ஊடகமான இந்தியா டுடே ஏக்சிஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக குறைந்த பட்சம் 361 தொகுதிகளையும் அதிக பட்சமாக 401 தொகுதிகளையும் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மோடி 3-வது தவணையாக மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜவகர்லால் நேருவுக்குப் பின்னர் தொடர்ந்து 3 தவணைகளாகத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமர் என்ற சாதனையை இதன் மூலம் மோடி படைப்பார்.
காங்கிரஸ் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தியா கூட்டணி குறைந்த பட்சமாக 131 தொகுதிகளைப் பெறும் என்றும் அதிகபட்சமாக 166 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் இந்தியா டுடே கணித்துள்ளது.