Home இந்தியா டெல்லி மேல்சபை உறுப்பினர் தேர்தல்- பிரதமர் மன்மோகன்சிங் இன்று மனுதாக்கல்

டெல்லி மேல்சபை உறுப்பினர் தேர்தல்- பிரதமர் மன்மோகன்சிங் இன்று மனுதாக்கல்

485
0
SHARE
Ad

manmohan-singh_350_090812123306கவுகாத்தி, மே 15- பிரதமர் மன்மோகன்சிங்கின் மேல்சபை உறுப்பினர் பதவி காலம் நாளையுடன் முடிவடைகிறது.

இதனையட்டி அவர் மீண்டும் அசாம் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

இதற்காக பிரதமர் மன்மோகன்சிங், இன்று (புதன்கிழமை) அசாம் மாநில தலைநகர் கவுகாத்தி சென்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

#TamilSchoolmychoice

இந்த மாநிலத்தில் எதிர்க்கட்சியான அசாம் கனபரிஷத் வசம் இருக்கும் இன்னொரு எம்.பி. தொகுதியும்  காலியாகிறது. இதற்கு இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

போட்டி இருந்தால் வருகிற 30-ந்தேதி அன்று தேர்தல் நடைபெறும். அன்று மாலையே முடிவு அறிவிக்கப்படும்.