Home இந்தியா திருவண்ணாமலை நீதிமன்றத்தில் விஜயகாந்த் நாளை ஆஜராகிறார்

திருவண்ணாமலை நீதிமன்றத்தில் விஜயகாந்த் நாளை ஆஜராகிறார்

710
0
SHARE
Ad

vijaykanthதிருவண்ணாமலை, ஜூன்5-  திருவண்ணாமலையில் கடந்த ஆண்டு நடந்த பொக்கூட்டத்தில் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை விஜயகாந்த் அவதூறாக பேசியதாக அரசு வக்கில் அன்பழகன் திருவண்ணாமலைநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக ஏற்கனவே 3 முறை நடந்த விசாரணையில் விஜயகாந்த் ஆஜராகவில்லை.

இந்நிலையில் நாளை விஜயகாந்த் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து நாளை விஜயகாந்த் நீதிமன்றத்தில் ஆஜராவார் எனத்தெரிகிறது.

இதையொட்டி திருவண்ணாமலை நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.