Home வாழ் நலம் கூந்தல் பராமரிப்பிற்கு மருதாணி

கூந்தல் பராமரிப்பிற்கு மருதாணி

690
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 26- சிலருக்கு தலை முடி பலமிழந்து காணப்படும். தலை வாரும்போதே அதிக அளவு உதிரும்.

henna-for-hairமருதாணி தூளை ஒரு பாத்திரத்தில் போட்டு, பிறகு அதில் கொதிக்க வைத்த தேயிலை  தூள் டிக்காஷனை ( ஆறிய பிறகு) அதில் ஊற்றி திடமாக கிளறி, பின் முட்டையின் வெள்ளை கரு, தயிர், சேர்த்து நன்கு கிளறி, பின் எலுமிச்சை பழ சாறு ஊற்றி 4 மணி நேரம் ஊற வைத்து, உங்கள் தலை முடியில் முழுவதுமாக படரும் படி ஊற வைத்து 3 மணி நேரம் கழித்து வெறும் தண்ணீரில் அலச வேண்டும். உங்கள் கூந்தல் உதிர்வது ஒரு முறை உபயோகத்தில் குறைந்துவிடும்.

hairகூந்தல் சிறிது நிறம் மாறும். வெயிலில் மட்டுமே சிறிது தங்க நிறமாக தெரியும். அது மிகவும் அழகாக தான் தெரியும்.

#TamilSchoolmychoice

நிறம் தேவை இல்லை என்றால், கூந்தலில் தேங்காய் எண்ணெய் போட்டு ஊற வைத்து, பின் மருதாணியை போடுங்கள்.

சிறிது சிவப்பு நிறம் வேண்டும் என்றால் தேயிலை தூளுக்கு பதிலாக பீட்ரூட் காயை வேகவைத்த தண்ணிரை மருதாணியில் ஊற்ற வேண்டும்.

நீண்ட கூந்தல் என்றால் 2 எலுமிச்சை,2 முட்டை வெண்கரு, ஒரு கிண்ணம் தயிர் போதும். சிறிய கூந்தல் என்றால் அனைத்திலும் 1 போதும். இவ்வாறு மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்து வாருங்கள். வித்தியாசம் தெரியும். இதனால் முடி உதிராது. நன்கு திடப்படும்.