Home அரசியல் அரசாங்கம் 3 மதமாற்றுச் சட்டவரைவுகளை வாபஸ் பெற்றது!

அரசாங்கம் 3 மதமாற்றுச் சட்டவரைவுகளை வாபஸ் பெற்றது!

428
0
SHARE
Ad

pln

கோலாலம்பூர், ஜூலை 8 – நாடாளுமன்றத்தில் இன்று இரண்டாவது வாசிப்புக்கு வரவிருந்த மூன்று மதமாற்றுச் சட்டவரைவுகளை அரசாங்கம் வாபஸ் பெற்றது.

இன்று காலை நாடாளுமன்றத்தில் நடந்த கூட்டத்தில், பிரதமர் துறை அமைச்சர் ஜமில் கீர் பஹாரோம் இதனை அறிவித்தார்.

#TamilSchoolmychoice

இஸ்லாம் சமய நிர்வாக (கூட்டரசுப் பிரதேசம்) சட்டவரைவு 2013, ஷ்யாரியா நீதிமன்ற சிவில் நடைமுறை (கூட்டரசுப் பிரதேசம்) (சட்ட திருத்தம்) சட்டவரைவு 2013, ஷ்யாரியா குற்றவியல் நடைமுறைகள் (கூட்டரசுப் பிரதேசம்)(சட்டதிருத்தம்) சட்டவரைவு 2013 ஆகியவை வாபஸ் பெறப்பட்ட அந்த மூன்று சட்டவரைவுகளாகும்.