Home நாடு கிள்ளான் வட்டார மாணவர்களுக்கான எஸ்பிஎம் படைப்பிலக்கியப் பயிற்சிப் பட்டறை

கிள்ளான் வட்டார மாணவர்களுக்கான எஸ்பிஎம் படைப்பிலக்கியப் பயிற்சிப் பட்டறை

829
0
SHARE
Ad

கோலாலம்பூர், செப். 5- எதிர்வரும் 21.9.2013 சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை மணி 4.30 வரை, கிள்ளான் புக்கிட் திங்கி ஹைலண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக நடைபெறவுள்ளது.

spmசிலாங்கூர் மாநில பணி ஓய்வு பெற்ற தமிழாசிரியர் மன்றம் இப்பயிற்சிப் பட்டறையை நடத்துகிறது.

சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகா கலை திட்டப் பிரிவின் ஆதரவுடன்  நடைபெறும் இந்தப் பயிற்சிப் பட்டறையில் 120 மாணவர்களும் 60 பெற்றோர்களும் 20 ஆசிரியர் பயிற்றுநர்களும் கலந்துகொள்ள விருக்கிறார்கள்.

#TamilSchoolmychoice

மலேசியத் தேர்வுக் கழக ப.மு. மூர்த்தியும், மலாயாப் பல்கலைக்கழக முனைவர் கிருஷ்ணன் மணியம்மும் உரையாற்றுவார்கள்.

இந்நிகழ்வில் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொள்ள சிலாங்கூர் மாநில பணி ஓய்வு பெற்ற தமிழாசிரியர் மன்றத்தின் தலைவர் மு. சுப்பிரமணியம் அழக்கிறார்.

மேல் விவரங்களுக்கு 017- 8890545 என்ற என்களின் வழி தொடர்பு கொள்ளலாம்.