பியூனஸ் அயர்ஸ், செப். 11- சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் (ஐ.ஓ.சி.) 125-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸ் நகரில் 4 நாட்கள் நடந்தது.
கடைசி நாளான நேற்று, உலக விளையாட்டு அரங்கில் மிகவும் அதிகாரம் படைத்த பதவியான ஐ.ஓ.சி.யின் புதிய தலைவருக்கான தேர்தல் நடந்தது.
2-வது சுற்று வாக்கெடுப்பு முடிவில் ஜெர்மனியின் தாமஸ் பேச் 49 வாக்குகள் பெற்று புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு அடுத்தபடியாக ரிச்சர்ட் கேரியானுக்கு 29 வாக்குகள் கிடைத்தன.
ஜெர்மனியை சேர்ந்த 59 வயதான தாமஸ் பேச், 1976-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வாள்சண்டை போட்டியின் பாயில் அணிகள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றவர்.
ஒலிம்பிக்கிக்கில் தங்கப்பதக்கம் வென்றவர், ஐ.ஓ.சி.யின் தலைவர் ஆவது இதுவே முதல் முறையாகும்.