Home நாடு 7.2 மில்லியன் ஆடம்பர மாளிகை: “அமைச்சர் நஸ்ரியின் மனைவிக்கும் சொத்துடமையில் பங்கு உண்டு”

7.2 மில்லியன் ஆடம்பர மாளிகை: “அமைச்சர் நஸ்ரியின் மனைவிக்கும் சொத்துடமையில் பங்கு உண்டு”

491
0
SHARE
Ad

Nazri-Featureஅக்டோபர் 8 – கலாச்சார, சுற்றுலாத் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிசின் (படம்) புதல்வர் நெடிம், 7.2 மில்லியன் ரிங்கின் விலையில் வாங்கியுள்ள ஆடம்பர மாளிகை குறித்த சர்ச்சைகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

“அது என் மகன் வாங்கியது. எனக்கு சம்பந்தமில்லை. எனது பிரச்சனையுமில்லை” என நஸ்ரி ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால் அந்த சொத்தில் நஸ்ரியின் மனைவியும் ஒரு கூட்டுப் பங்குதாரர் என்று நஸ்ரியின் புதல்வர் நெடிமின் காதலியும் நடிகையுமான  டேனிஷ் நோரா தற்போது தெரிவித்திருக்கின்றார்.

Danish-Nora-Feature“எனக்குத் தெரிந்தவரையில் அந்த ஆடம்பர மாளிகையும், ஆடம்பரக் காரும் நெடிமின் அம்மாவுக்காக வாங்கப்பட்டது. நெடிம் மட்டும் இவற்றுக்கான பணத்தை செலுத்தவில்லை. மாளிகையும் காரும் எனக்காக வாங்கப்பட்டவை அல்ல. நெடிம் செய்யும் எல்லா காரியங்களிலும் என்னை தொடர்புப் படுத்துவதால் நான் வருத்தத்தில் இருக்கின்றேன்” என டேனிஷ் நோரா சினார் (படம்) ஹாரியான் பத்திரிக்கையில் கருத்து தெரிவித்ததாக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.

சொலிடாரிடி அனாக் முடா மலேசியா (Solidariti Anak Muda Malaysia) என்ற பிகேஆர் கட்சியுடன் தொடர்புடைய அரசு சாரா இயக்கம், நஸ்ரியின் மகன் எவ்வாறு இவ்வளவு விலையுடைய ஆடம்பர மாளிகையை வாங்க முடியும் என கேள்வி எழுப்பியிருந்ததோடு, தக்க ஆதாரங்களுடன்  அந்த மாளிகை குறித்த ஆவணங்களையும் வெளியிட்டிருந்தது.

நெடிம் தற்போது நஸ்ரியின் பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற தொகுதியில் இளைய சமுதாயத்தினருக்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றார். ஏற்கனவே, அவர் நஸ்ரியின் சுற்றுலாத் துறை அமைச்சில் அதிகாரபூர்வ பணியாளராக பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததும் நாட்டில் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

பின்னர் அவர் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ பணியாளர் அல்ல என அரசு தரப்பபில் விளக்கம் தரப்பட்டது.

கடந்த ஆண்டு சர்ச்சைக்குரிய ஒரு வர்த்தகரான மைக்கல் சியா என்பவரின் பெயரில் உள்ள ஓர் ஆடம்பரக் காரை நெடிம் ஓட்டிக் கொண்டிருக்கின்றார் என்ற தகவல் பத்திரிக்கைகளில் வெளிவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.