மேலும் அந்த ஆலையத்தை மீண்டும் கட்டுவதற்குத் தேவையான அனைத்து செலவுகளையும் மாநகர மன்றம் ஏற்க வேண்டும் என்றும் மோகன் தெரிவித்துள்ளார்.
விரைவில் ஆலயம் கட்டுவதற்கான பணி தொடங்கப்படவில்லை என்றால், கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னானுக்கு எதிராக புத்ரா ஜெயாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் மோகன் நேற்று அறிவித்துள்ளார்.
அதோடு, ஜாலான் பி.ரம்லி முனீஸ்வரர் காளியம்மன் ஆலயத்தை உடைத்தவர்களுக்கு ஸ்ரீ முனீஸ்வரர் மிக விரைவில் பாடம் புகட்டுவார் என்று மோகன் கூறியதாக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.