Home கலை உலகம் 5 மாநில தேர்தல் பற்றிய சமந்தாவின் அரசியல் கருத்தால் பரபரப்பு!

5 மாநில தேர்தல் பற்றிய சமந்தாவின் அரசியல் கருத்தால் பரபரப்பு!

536
0
SHARE
Ad

samantha

சென்னை, டிசம்பர் 17- அரசியல் பற்றி துணிச்சலான கருத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் சமந்தா. சமீபத்தில் நடந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருக்கிறார்.

அதில் ஆம் ஆத்மி கட்சி பற்றி கருத்து தெரிவித்திருக்கும் சமந்தா, இது ஒரு இனிய தொடக்கம். மக்கள் மாற்றத்தை விரும்பி இருக்கிறார்கள். டெல்லியில் இருந்து இந்த மாற்றம் ஆரம்பமாகியுள்ளது என்று தேர்தல் முடிவு பற்றி கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இவரது கருத்தை வரவேற்று சமந்தாவின் காதலர் சித்தார்த்தும் பதில் கருத்து வெளியிட்டிருக்கிறார். சமந்தாவின் தைரியமான கருத்தால் மற்ற நடிகர், நடிகைகள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயம் சமந்தாவை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.