“பொதுநிதி வீணாவதை குறைக்க வேண்டும். இல்லையென்றால் அது பட்ஜெட் பற்றாக்குறையையும், குறைகளையும் தேசியப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் என்பதை மசீச அரசாங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றது” என்றும் வீ கா சியாங் குறிப்பிட்டுள்ளார்.
“மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் ஆண்டறிக்கையை கருத்தில் கொண்டு, உடனடியாக அரசாங்க ஊழியர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்வதை நிறுத்த வகை செய்து, பொதுநிதி வீணாவதைத் தடுக்க வேண்டும்” என்றும் வீ தெரிவித்துள்ளார்.
உருமாற்றத்தை கொள்கையாகக் கொண்டுள்ள அரசாங்கம், அரசாங்க ஊழியர்கள் செய்யும் தவறுகளைக் கண்டறிய விசாரணை மேற்கொண்டு, அவர்கள் தவறு செய்திருந்தால் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வீ கா சியாங் தெரிவித்துள்ளார்.