Home தொழில் நுட்பம் புத்தம் புதிய தட்டைக் கணினி அறிவிப்பை வெளியிட்டது சாம்சுங்

புத்தம் புதிய தட்டைக் கணினி அறிவிப்பை வெளியிட்டது சாம்சுங்

485
0
SHARE
Ad

Samsung-Galaxy-Note-Pro-DSC05107-640x359

கோலாலம்பூர், ஜன 9 – சாம்சுங் நிறுவனமானது தனது புதிய தயாரிப்பான சாம்சுங் கேலக்ஸி நோட் ப்ரோ 12.2 (Samsung Galaxy Note Pro 12.2) தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.

சர்வதேச மின்னியல் கண்காட்சியல் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த தட்டைக் கணினி  (டேப்லட்) ஆனது 12.2 அங்குல அளவு, 2560 x 1600 பிக்சல் தீர்மானம் உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும் கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இந்த டேப்லட்டில் குவால்காம் ஸ்னாப் 800 (Qualcomm Snapdragon 800) செயலி, 3GB RAM மற்றும் 32GB அல்லது 64GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

இவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவற்றுடன் 9,500 mAh மின்கலத்தினையும் கொண்டுள்ளது.