இந்த வழக்கின் மேல் முறையீட்டை விசாரித்த இந்திய உச்சமன்றம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனது வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதது பற்றிய வழக்கை நீதிமன்றம் நான்கு மாதங்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.
இந்த வழக்குகளுக்கு எதிராக ஜெயலலிதா தொடுத்திருந்த மேல் முறையீடுகள் சென்னை உயர் நீதிமன்றத்தால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிமன்றமும் இந்தமேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்திருக்கிறது.
உச்சநீதிமன்ற நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன்உள்ளிட்டஅமர்வு வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதது குற்றம் என்று தீர்ப்பளித்து, வழக்கை விசாரித்து வரும் சென்னை நீதிமன்றம் நான்கு மாதங்களுக்குள் விசாரணையை நடத்தி தீர்ப்பை வழங்க உத்தரவிட்டது.
இதே வழக்கில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மீதும் விசாரணை நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.