Home நாடு காலிட், அஸ்மின் சண்டையை நிறுத்த வேண்டும் – அன்வார் அறிவுரை

காலிட், அஸ்மின் சண்டையை நிறுத்த வேண்டும் – அன்வார் அறிவுரை

543
0
SHARE
Ad

Khalid-&-Azmin-Ali 300 x 200கோலாலம்பூர், பிப் 10 – சிலாங்கூர்  மாநில  மேம்பாட்டுக் கழகத்தில் (பிகேஎன்எஸ்) இருந்து நீக்கம் செய்யப்பட்ட 22 ஒப்பந்த தொழிலாளர்கள் விவகாரத்தை முன்வைத்து காலிட்டும், அஸ்மினும் சண்டையிட்டுக் கொள்வதை நிறுத்த வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

“இந்த விவகாரத்தில் அஸ்மின் அலி அவ்வாறு தவறாக நடந்திருக்கக் கூடாது. தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பில், அவர் தான் காரணம் என்று காலிட் கூறவும் இல்லை.” என்று அன்வார் கூறினார்.

மேலும்,“நான் அவர்களது பிரச்சனையை கண்டும் காணாதது போல் இருப்பதாக பலர் கூறுகின்றனர். ஆனால் அது உண்மையில்லை. கடுமையாக அறிவுரை கூறியிருக்கின்றேன். இதற்கு மேல் என்னால் விளக்கமளிக்க முடியாது” என்று அன்வார் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

கடந்த வாரம், பிகேஎன்எஸ் தொழிலாளர்கள் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துரைத்த பிகேஆர் துணைத்தலைவர் அஸ்மின் அலி, சிலாங்கூர் மந்திரி பெசாரான காலிட் இப்ராகிம் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறினார்.