Home இந்தியா ஜெயலலிதா முடிவுக்கு கருணாநிதி மகிழ்ச்சி!

ஜெயலலிதா முடிவுக்கு கருணாநிதி மகிழ்ச்சி!

404
0
SHARE
Ad

M. Karunanidhiசென்னை, பிப் 19 – ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி இதனை தெரிவித்தார்.

மேலும், ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற 3 பேர் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் முடிவுக்கு விரைவில் மத்திய அரசும் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.