Home கலை உலகம் வில்லன் நடிகர் மீது முருகதாஸ் கோபம்!

வில்லன் நடிகர் மீது முருகதாஸ் கோபம்!

629
0
SHARE
Ad

10_CP_MURUGADOSS2_1358540gசென்னை, பிப் 26 – கதையை வெளியில் சொன்ன வில்லன் நடிகர் மீது முருகதாஸ் கோபமடைந்தார். துப்பாக்கி படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் விஜய்யுடன் இணைந்து புதிய படத்தை உருவாக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடந்தது.

அப்போது படமாக்கப்பட்ட ஒரு காட்சியில் வங்காள வில்லன் நடிகர் தோடா ராய் சவுத்ரி நடித்தார். படப்பிடிப்பு முடிந்து சென்ற அவர் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். அப்போது பத்திரிக்கையாளர்களிடம் முருகதாஸ் பட கதையை அவர் கூறிவிட்டதாக கூறப்படுகிறது. இது பட தயாரிப்பாளருக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து வில்லன் நடிகர் தோடாவின் வேடம் படத்தில் குறைக்கப்பட்டது. தோடா, படத்தின் வில்லன் கிடையாது. இன்னும் வில்லன் வேடத்துக்கு தகுதியான நடிகரை தேடிக்கொண்டிருக்கிறோம் என்று முருகதாஸ் கூறினார்.

#TamilSchoolmychoice

கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடந்தபோது துரத்துதல்  காட்சிக்காக சிலர் தேவைப்பட்டனர். அப்படி தேர்வானவர்தான் தோடா என்றார் இயக்குனர் முருகதாஸ். சமீபகாலமாக பெரிய இயக்குனர்கள் தங்கள் படங்களின் கதையை ரகசியமாக பாதுகாக்கின்றனர்.