பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உ.பி. மாநிலம் வாரணாசியில் போட்டியிடுவார் என கடந்த வாரம் செய்திகள் வெளியாயின. இந்த தொகுதியின் தற்போதைய உறுப்பினர் முரளி மனோகர் ஜோஷி லக்னோவில் போட்டியிடுவார் என கூறப்பட்டது.
80 தொகுதிகளை கொண்ட உத்திர பிரதேசத்தில் அதிக இடங்களை பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்தில் மோடியை நிறுத்த பாஜ முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இருப்பினும் சொந்த மாநிலத்தையும் விட்டு விடக்கூடாது என்பதால் குஜராத்திலும் ஒரு தொகுதியில் மோடியை நிறுத்த பாஜ மேலிடம் முடிவு செய்துள்ளது.
மார்ச் 13-ஆம் தேதி பாஜகவின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் நடைபெற இருக்கிறது. இதன்பின்னர் பாஜகவின் அடுத்த வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதில் நரேந்திரமோடி மற்றும் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் ஆகியோரது பெயர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.