விஜய் சேதுபதி கதாநயாகனாக நடிக்கும் இப்படத்திற்கு ‘வசந்த குமாரன்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. பாலா – விஜய் சேதுபதி இணையும் முதல் படம் இது. சத்யராஜ், தேவயானி நடித்த ‘செம ரகளை’, ஸ்ரீகாந்த் நடித்த ‘எதிரி எண் 3′ உள்ளிட்ட ஏராளமான படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய ஆனந்த் குமரேசன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்குகிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். கதாநாயகிகள் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. ஒரு அழகான காதல் கதை, இனிமையான குடும்பப் பின்னணியில் ஜனரஞ்சமாக உருவாக உள்ளதாக இயக்குநர் ஆனந்த் குமரேசன் தெரிவித்துள்ளார்.