Home உலகம் உக்ரைனிடமிருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவித்தது கிரீமியா!

உக்ரைனிடமிருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவித்தது கிரீமியா!

474
0
SHARE
Ad

imagesnnnnகீவ், மார்ச் 13 – சோவியத் ரஷ்யாவில் இருந்து பிரிந்த நாடுகளில் உக்ரைனும் ஒன்று. அங்குள்ள கிரீமியா ரஷியாவை ஒட்டியுள்ளது. இங்கு வாழ்பவர்களில் 65 சதவீதம் பேர் ரஷியர்கள். இப்பகுதி தன்னாட்சி உரிமை பெற்றது. தற்போது இது உக்ரைனிடமிருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவித்துள்ளது. உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே தற்போது மோதல் முற்றியுள்ளது.

இந்த நிலையில், ரஷியாவுக்கு ஆதரவாகவே இருந்து வந்தனர் கிரீமியர்கள். சமீபத்தில் உக்ரைனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் கிரீமியா பகுதியை ரஷிய ராணுவம் ஆக்கிரமித்தது. அதற்கு கிரீமியா பகுதியைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தற்போது அங்குள்ள நாடாளுமன்றக் கட்டிடம்  மற்றும் அரசு அலுவலகங்களில் ரஷிய தேசியக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது.  ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. அதை ரஷியா கண்டு கொள்ளவில்லை. இதற்கிடையே உக்ரைனிடம் இருந்து விடுதலை பெற்று ரஷியாவுடன் இணைய கிரீமியா விருப்பம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

அதற்கான தீர்மானம் கிரீமியா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானம் நேற்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நாடாளுமன்ற உரிப்பினர்களின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது.

அதை தொடர்ந்து கிரீமியா உக்ரைனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், ரஷியாவுடன் கிரீமியா இணைய முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான பொது வாக்கெடுப்பு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இந்த வாக்கெடுப்பு வருகிற 16 -ஆம் தேதி நடத்தப்படுகிறது.