Home இந்தியா ராஜீவ் காந்தி கொலை வழக்கில்7 பேரை விடுவிக்கவே கூடாது – சோனியா, ராகுலிடம் கோரிக்கை!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில்7 பேரை விடுவிக்கவே கூடாது – சோனியா, ராகுலிடம் கோரிக்கை!

419
0
SHARE
Ad

13-perarivalan-santhan-murugan-nalini-s-jayakumar-p-ravichandran-1-600டெல்லி, மார்ச் 13 – முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கு சம்பந்தமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்து பேசினார். 1991-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டுவெடிப்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.

அப்போது அவருடன் காவல் துறை அதிகாரிகள் உள்பட 15 பேர் பலியாகினர். இந்நிலையில் பலியான 15 பேரின் குடும்பத்தார், தமிழக காங்கிரஸ் மாநில செயலாளர்கள் எம்.எஸ். திரவியம், கவிஞர் ஜோதிராமலிங்கம் ஆகியோருடன் சேர்ந்து டெல்லிக்கு சென்றனர்.

அங்கு அவர்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யவே கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.

#TamilSchoolmychoice